கவிதைகளே்்்

கல்வியெனும் கலைமகளே்்்்என் கவிதைகளே்்்

நான் நகரும் வழியெல்லாம் 
நீயும் உன் அன்பும் சிதறிக் கிடக்கின்றன 
வார்த்தைகளாகவும் வாசகங்களாகவும் 

வேலைப்பழுவில் கருணையின்றி கவனமாக கடக்கிறேன் 
கண்டும் காணதது போலவே..

எனக்குத் தெரியும்...
அதுபோலதான் நீயும் என்று ..

அறிவாயோ நீ ?
இப்பெருவெளியின் துளி கணத்தையும் 
ஒருபோதும் கடக்க முடியாது 
நீ என்னையும் நான் உன்னையும் மறந்து 
..
வாசகங்களில் விட  ...வார்த்தைகளில் விட 
அர்த்தம் ஏதுமற்ற இடைவெளிகளில் 
கண்டுகொண்டுதான் இருக்கிறோம் 
உன்னை நானும் என்னை நீயும் .

வாழ்வியல் நடிப்பில் ஒருவரை ஒருவர்
ஜெயித்துக் கொண்டிருப்பதாக 
நினைத்து இறுமாந்து போகிறோம் 

இருவருக்குமே தெரியவில்லை 

எல்லா முற்றுப்புள்ளியிலும் 
முடிய மறுத்து 
பெருகிக் கொண்டே இருக்கிறது 
என் மீதான உனதும்  
உன் மீதான எனதுமான 
பேரன்பு பெருங்கடல்

Comments