கவிதைகளே்்்
கல்வியெனும் கலைமகளே்்்்என் கவிதைகளே்்்
நான் நகரும் வழியெல்லாம்
நீயும் உன் அன்பும் சிதறிக் கிடக்கின்றன
வார்த்தைகளாகவும் வாசகங்களாகவும்
வேலைப்பழுவில் கருணையின்றி கவனமாக கடக்கிறேன்
கண்டும் காணதது போலவே..
எனக்குத் தெரியும்...
அதுபோலதான் நீயும் என்று ..
அறிவாயோ நீ ?
இப்பெருவெளியின் துளி கணத்தையும்
ஒருபோதும் கடக்க முடியாது
நீ என்னையும் நான் உன்னையும் மறந்து
..
வாசகங்களில் விட ...வார்த்தைகளில் விட
அர்த்தம் ஏதுமற்ற இடைவெளிகளில்
கண்டுகொண்டுதான் இருக்கிறோம்
உன்னை நானும் என்னை நீயும் .
வாழ்வியல் நடிப்பில் ஒருவரை ஒருவர்
ஜெயித்துக் கொண்டிருப்பதாக
நினைத்து இறுமாந்து போகிறோம்
இருவருக்குமே தெரியவில்லை
எல்லா முற்றுப்புள்ளியிலும்
முடிய மறுத்து
பெருகிக் கொண்டே இருக்கிறது
என் மீதான உனதும்
உன் மீதான எனதுமான
பேரன்பு பெருங்கடல்
Comments