அப்பன் போட்ட கடுதாசி

அப்பன் போட்ட கடுதாசி

நல்லாருக்கியா சாமிநானும் உங்காத்தாளும் ஒன் ஞாபகமாஊருல வலம் வரோமையாகைகாலெல்லாம் சொகமா இருக்குதாயாவேலவேலைக்கு கஞ்சி குடுச்சுரியாசாகடிக்கிற வெயிலடிக்குதுனு சேதி கேட்டேன்வெயில்ல ரொம்ப அலையாதையா
நீ மொத தடவ அனுப்புன பணத்தமடில கட்டிட்டு ஊர் முழுக்கஎம்புள்ள எம்புள்ளனு ஒன வித்துப்புட்டா உங்காத்தா
ஏழெட்டு மாசம் போகஉங்காத்தா என பாத்து கேட்டா' முப்பதுக்கு முந்நூறு வாங்கிஅவன படிக்க வச்சியேஇப்டி முந்நூறு மயிலு தள்ளியிருந்துபணம் அனுப்பவா?இதுக்கு எம்புள்ள படிக்காம இருந்துருந்தாஎம்பக்கத்திலேயே இருந்துருப்பான்'-னுகாதுல கேட்டதும் ஆடிப்போயிட்டேன் சாமி
ஊருபக்கமே வராமகாசு மட்டும் அனுப்பிட்டே இருக்கேலஅதன் உங்காத்தாளுக்குஒன் உருவம் கண்ண குத்திருச்சு போல
பக்கத்து வீட்டு பரமசிவம் இறந்ததுக்குஅவென் புள்ள தந்தி அனுப்சானாம்பொணத்த ரெண்டு நாள் வச்சுருக்க சொல்லிவேல முடிஞ்சு வந்துறேன்னு
பரமசிவம் சொன்னது சரியா போச்சு'கல்யாணம் காதுகுத்துனா ஞாயித்துக்கெழம வச்சாத்தான் எம்புள்ள வருவேன்னு சொல்லுவான்சாகுற காலத்துல எம்புள்ள பக்கத்துல இல்லையேஞாயித்துக்கெழமையா பாத்து எனக்கு சாவு வரணும்னுஅந்த ஈசான வேண்டிட்டு இருக்கேன்'- னுஅவென் பயந்தது சரியா போச்சையா
வேல வேலைனு நீயும் சுத்திட்டே இருக்கஎனக்கும் இந்த மாதிரி சாவு வந்துருமோனுபயமா இருக்குதியாவேல போனா போகுதுஇங்க வந்துரியாகூழோ கஞ்சியோ வெவசாயம்பாத்து சேந்து குடிச்சுக்கலாமியா
சாகப்போற காலத்துலஎங்க நெஞ்சுல இருக்க ஆச இதுதாயாநீ எங்க கூட இருக்கணும்னுஉங்காத்தாளுக்கு சொன்ன தைரியமும்இப்ப என்கிட்ட இல்லையா
வயசாகி போச்சுலஅதன் புத்தி மங்கி போயிஏதேதோ சொல்லிப்புட்டேன்கவலைப்படாம நீ வேல பாருயாஉங்காத்தாள நா தேத்திக்கிறேன்அடுத்த கடுதாசி கொஞ்ச நாள் கழுச்சு போடுறேன்

Comments