உயிர் கொண்டுபார்க்கின்றேன்....

உன்னைக் கண் கொண்டுபார்க்கவில்லை
உயிர் கொண்டுபார்க்கின்றேன்....
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல...
உன் மேலான என் நட்புபறித்தால் திருப்பி
முளைக்காதமரம் என் நட்பு...
கண்கள் செய்யும் சிறு தவறுக்குஇதயம்
அனுபவிக்கும் ஆயுள் தண்டனை காதல்...
ஆனால் ஆயுள் வரை சுகமானவதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்....
வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்என்றால்
காதலை நேசி...சந்தோஷமே
வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசிநான்
உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...
என் இரு விழிகள்ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

Comments