ஆண் பெண் என்ற இரு புள்ளி.....

ஆண் பெண் என்ற இரு புள்ளிகளுக்கு இடையே வரையபட்ட கோடுதான் நாம் வாழும் சமுதாயம் .இதில் ஒரு புள்ளி இல்லாவிடினும் இந்த கோட்டை வரையமுடியாது.

உடல் அமைப்பில் மட்டும்மல்லாமல் உணர்விலும், சிந்தனையிலும் செயலிலும் ஆணும் பெண்ணும் வேறுபட்டே இருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் இரண்டு துருவங்கள். ஆனால் உடல் தேவைக்காகவும் உணர்வுகளின் தேவைக்காகவும் இரு துருவமும் இணைக்க பட்டிருக்கிறது. தேவைகள் , விருப்பங்கள் இரண்டு பேருக்குமே மாறுபடுகிறது .

இந்த உலகத்தில் வாழ்வதற்க்காக படைக்கப்பட்ட உயிரினங்களில் இருபாலுக்கும் தனிதனியாக சில சலுகைகள் வழங்கபட்டிருக்கிறது .

அது மனித இனத்திர்க்கும் பொருந்தும் அதில் ஓர் உதாரணம் ஆண் உடலளவில் உறுதியாக இருக்கிறான் பெண் மனதளவில் உறுதியாக இருக்கிறாள். பெண் சிறிய பிரச்சனைகளுக்கு கூட அழுது விடுகிறாள் அப்படி இருக்கும்போது பெண் எப்படி மனதளவில்ஆணைவிடஉறுதியானவள் , என சிலருக்கு தோணலாம் அழுவது கூட பெண்ணிற்க்கு இயற்கையாக வழங்கபட்ட ஒரு சலுகை தான். தங்களைபிரச்சனையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் மனஅழுத்ததிலிருந்து விடுபடவும் பெண்களின் மூளை இடும் கட்டளை தான் அழுகை . அழுது முடித்த பின் பிரச்சனையை எப்படி சம்மாளிக்கலாம் என பெண்ணின் மனம் சிந்தித்து தீர்வுகாண்கிறது. அதற்க்கு தீர்வு கிடைக்காவிடில் அதை அத்துடன் மறந்துவிட்டு அடுத்தகட்டம் நோக்கி அவளால் நகரமுடியும்.

பெண்களை போல ஆண்களால் சுலபமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடிவதில்லை என்பது உண்மை . பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாவிட்டாலும் அடுத்தகட்டத்தை நோக்கி எளிதாக நகர முடியாமல் அதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறான் தீர்வுகிடைக்காததிற்க்கு திரும்ப திரும்ப விடை தேடி கொண்டிருக்கிறான் அதனால் தான் தத்துவஞானிகளும் விஞாணிகளும் அதிகமாக ஆண்களாக இருகிக்றார்கள் என கருதுகிறேன்.

பெண் தோல்விகளை எளிதில் தாங்கிக்கொள்கிறாள். அல்லது தாங்கிக்கொள்ள பழகி இருக்கிறாள். ஆனால் இது ஆண்களுக்கு சிரமமாகாவே இருக்கிறது வாழ்ந்த சூழ்நிலையிலிருந்து புதிய சூழ்நிலைக்கு போகும்போது பெண் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதில் மாற்றிக் கொள்கிறாள். ஆனால் ஆண்களுக்கு எளிதாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள முடிவதில்லை. ஆனைவிட பெண்ணிற்க்கு உணர்வை வெளிபடுத்தும் மொழித்திறன் அதிகம் அதனால் அவளால் அதிகமாக பேச முடியம் அல்லது அதிகம் பேசுவதை அவள் விரும்புகிறாள்.

மனித இனம் செய்யும் செயல்கள் அனைத்தும் இரண்டு உள் நோக்கத்திலிருந்து உருவாகிறது என உளவியலாளர் சிக்மன்ட் ஃப்ராயிடு கூறுகிறார். முதலாவது நம்முடைய பாலுணர்வு தூண்டுதல், இரண்டாவது முக்கியமனவராக விளங்க வேண்டும் என்னும் மனதின் தூண்டுதல். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக மனிதஇனம் செய்யும் செயல் நாளடவில் சமுகத்தை நோக்கி திரும்புகிறது. தன்னை இந்த சமுகம் முக்கியமனவராக கருத வேன்டும் என மனம் நினைக்கிறது. அந்த நினைப்பு தான் மனிதனை விஞ்ஞானியாகவும் விளையாட்டு வீரனாகவும் , சினிமா நடிகனாகவும் , தொழில் அதிபர்களாகவும் ஆக்கிறது .

நான்கு பேர் வாழ்கிற வீட்டில் நாற்பது படுக்கை அறைகளை கொண்ட வீட்டை கட்டுவதல்லாம் சமுதாயத்தில் தன்னை முகியமனவராக காட்டிக் கொள்வதற்க்கான செயல்பாடு தான்.

எதிர் பாலின கவர்ச்சி/ ஈர்ப்பு இல்லாமல் பாலியல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதாக மனித இனம் இருந்திருந்தால் இன்னும் மனித இனம் விலங்குகளை போலதான் வாழ்ந்து கொண்டிருக்கும் . பெண்ணை தன்பால் ஈர்ப்பதற்க்கு ஆண் செய்த செயல்பாடும், ஆணை தன்பால் ஈர்ப்பதற்க்கு பெண் செய்த செயல்பாடும்தான் கற்காலத்தில் வாழ்ந்த மனித இனத்தை கம்ப்யூட்டர் காலத்திற்கு அழைத்து வந்ததும், செயர்க்கை கோளை அனுப்ப வைத்ததும் எல்லம் 

Comments