இட‌ம் ‌பிடியு‌ங்க‌ள்

மு‌த்து‌க்குமா‌ரி‌ன் க‌விதை


இடிபாடுகள் புதுப்பித்து
கட்டிடம் கட்டி
ஆவிகள் ஊளையிடும் நகரில்
மனிதர்களை குடியேற்ற அல்ல
பேச்சு;

பயம் உறைந்த
ரத்தமாய்
உடல்கள்;

எழுந்தது பார் நவ சகாப்தம்!
பெரு வயிறு, பெருந்தீனி, பிணந்தின்னி
வியாபாரியின் பேச்சில்
மறைகிறது
இடுபாடுகளுக்கடியில்
கைத்தட்டி கால்பந்து ரசித்து,
ஒயின் குடிக்கும் குடும்பம்;

உன்னத வாழ்வு,
சீரமைந்த வாழ்வு குறித்து
பிழைத்தவர்க்ள் யோசிக்க
இறந்த சதைகள் என்னவோ கோபுரங்களாய்
குவிகிறது மறு உலகம் நோக்கி.

முதல் ஆட்டம் என்று துவங்கி
இறுதி ஆட்டம் ஆடும் பேயரசுகாள்!
இப்போதே பிடியுங்கள்
உங்கள் இடத்தை இடுகாட்டில்.

Comments