பிளவுற்றல்

பிளவுற்றல்
தஸ்லீமா ந‌ஸ்‌ரீன் கவிதைகள்


அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை.
அவள் உன் சகோதரி, உண்மையில் அவள் உனக்கு ஒன்றுமேயில்லை.
நீ மட்டும் தனியானவள்.
உனக்கு நண்பர்கள் என்று சொல்பவர்கள் கூட உனக்கு ஒன்றுமேயில்லை.
நீ மட்டும் தனியானவள்.

நீ அழும்போது, உன் விரல்கள்
கண்ணீரைத் துடைக்கும், அந்த விரல்கள் உன்னுடையவை.
நீ நடந்தால் உன் கால்கள்
நீ பேசினால் உன் நாக்கு
நீ சிரித்தால், உன் மகிழ்வான கண்களில் உன் நண்பர்கள்.

உன்னைத் தவிர உனக்கு வேறு யாருமில்லை,
விலங்குகள் இல்லை அல்லது தாவரங்கள் கூட இல்லை.

ஆனால் நீ மட்டுமே உனக்கென்று அடிக்கடி கூறுகிறாய்
அது உண்மைதானா?

Comments